தனிமையில் காற்றோடு பேச
தவிப்புகள் அலையாய் தோன்றும் !
கனியாத கனவுகளின் பாதி
கண்ணோரம் வாசம் செய்யும் !
இனிமையில் கிளர்ச்சியுறும் எண்ணம்
இயற்கையின் இதயம் சென்று
பனியின் இதமாய் வருடும்
பாட்டில் தோன்றும் இன்பம் !
கனியாத கனவுகளின் பாதி
கண்ணோரம் வாசம் செய்யும் !
இனிமையில் கிளர்ச்சியுறும் எண்ணம்
இயற்கையின் இதயம் சென்று
பனியின் இதமாய் வருடும்
பாட்டில் தோன்றும் இன்பம் !
அலையின் காற்றில் ஊடே
அணிவகுத்து செல்லும்! கண்ணீர்
உலையில் வெந்து கரையும்
உணர்வின் வெம்மை குறையும் !
நிலையின்றி குலையும் நினைவில்
நெடுநேரம் பயணித்து இறுதியற்ற
தொலைவின் வெளியில் நின்று
தொடர்ந்து கண் இமைக்கும் !
அணிவகுத்து செல்லும்! கண்ணீர்
உலையில் வெந்து கரையும்
உணர்வின் வெம்மை குறையும் !
நிலையின்றி குலையும் நினைவில்
நெடுநேரம் பயணித்து இறுதியற்ற
தொலைவின் வெளியில் நின்று
தொடர்ந்து கண் இமைக்கும் !
மூங்கில் காட்டின் வெளியே
மோனப்பாடல் இசைக்கும் ! ஞானப்
பாங்கின் வழியே கடந்து
பாதை சென்று சமைக்கும்
ஓங்கி வளர்ந்து நிற்கும்
உற்று பாரத்தால் நகைக்கும்!
தாங்கி நிற்கும் உயிரின்வெளியே
தகிப்பு புகையாய் கடந்துசெல்லும் !
மோனப்பாடல் இசைக்கும் ! ஞானப்
பாங்கின் வழியே கடந்து
பாதை சென்று சமைக்கும்
ஓங்கி வளர்ந்து நிற்கும்
உற்று பாரத்தால் நகைக்கும்!
தாங்கி நிற்கும் உயிரின்வெளியே
தகிப்பு புகையாய் கடந்துசெல்லும் !
அனலின் தனிமைக் காட்டில்
ஆயிரம் கதைகள் சொல்லும்! மெய்
புனலின் வழியே நீந்தி கடக்கும்
பொட்டலின் வாசம்பிடிக்கும்! கொடுங்
கணத்தின் வேரைத்தேடி வெளியில்
காலம் நடக்கும் ! காமுறும்
மனத்தின் உடலெங்கும் ஆசை
மணத்தின் நெடி வீசும் !
ஆயிரம் கதைகள் சொல்லும்! மெய்
புனலின் வழியே நீந்தி கடக்கும்
பொட்டலின் வாசம்பிடிக்கும்! கொடுங்
கணத்தின் வேரைத்தேடி வெளியில்
காலம் நடக்கும் ! காமுறும்
மனத்தின் உடலெங்கும் ஆசை
மணத்தின் நெடி வீசும் !
ஒன்றல்ல இரண்டென்று ஒருகணம்
ஓங்கி உரைக்கும் காட்சி
ஒன்றல்ல நீளும் படர்வெளியில்
ஒருமையின் விரல்ஒன்று தனித்து நிற்கும் !
அன்றிலின் சிறகொன்றில் முகம்புதைக்க
ஆவலுறும் ஆசைவெளி எங்கும்
தென்றல் வந்து சேதிசொல்ல
தீயாய் மேனி சிவக்கும் !
ஓங்கி உரைக்கும் காட்சி
ஒன்றல்ல நீளும் படர்வெளியில்
ஒருமையின் விரல்ஒன்று தனித்து நிற்கும் !
அன்றிலின் சிறகொன்றில் முகம்புதைக்க
ஆவலுறும் ஆசைவெளி எங்கும்
தென்றல் வந்து சேதிசொல்ல
தீயாய் மேனி சிவக்கும் !
No comments:
Post a Comment