Tuesday, 24 September 2019

இயலாமை

நீ அழைக்காத
போதெல்லாம்
அழையாமல்
வந்து நிற்கிறது
எனது
இயலாமை !"...

மொழி

சொற்களற்று
விக்கித்து நிற்கும்
கணங்களில்
பார்வைகள் இரண்டையும்
ஒன்று சேர்க்கும்
புரியாத மொழியை
போதிக்கிறது
மவுனம் !"...

பிரிவு

உனக்கும்
எனக்குமான
ஆழ்ந்த
இடைவெளியில்
வருத்தமுடன்
வெளியேறுகிறது
பிரிவு !"...

தாகம்

கோப்பைகள்
நிரம்பியப்பின்பும்
நிறைவின்றி
தவிக்கிறது
தாகம் !"...

மழை

துரத்தும் மழை வாசத்தின்
எல்லையை
வேக வேகமாய் கடந்து
தொலைதூரத்திர்க்கப்பால் சென்று
இளைப்பாறுகிறது
மழைக்குறித்த கவிதைகள் !"....