Friday, 18 January 2019

கண்ணீர் நூல்

ஒரு
நூலின் ஒரு  முனையில் நீ....
மறு முனையில் நான் ......



இருவரும்
இருவேறு திசைகளில் ...


தினசரி
காலை மாலை
நீ வரும் திசை தேடி
என் கண்கள் தவிக்கின்றன !
ஆனால்
திசைகளின் முகத்தில்
நீ -
திரையிட்டிருக்கிறாய் !



அன்றாடம்
நடை பழகிய
வாடிக்கையான பாதைகளில்
உன் கால் தடங்கள்
ஏதாவது மிச்சமிருக்கிறதா?
என -
என் தேடுதல்கள் !



காற்றின் வழியே
உன் உதடுகளின் அசைவுகளில்
என் பெயரின்  உச்சரிப்பு
எங்காவது வருகிறதா என
கூர்மையடைகிறது
என் செவிகள்.



தினசரி பொழுதுகளில்
உன் பெயரை
எழுதி எழுதி
என் நெஞ்சம் நிறைவு கொள்கிறது !



தினந்தோறும்
வழி பார்த்து
வழி பார்த்து
விழிகளுக்கும் வயோதிகம்.



பல்லவி பாதியில்.....
நீ
அனுபல்லவி எழுதினால்தான்
பாடல் அரங்கேறும் !



உன்னால் ஆக்கிரமிப்பு செய்யப்பட
என் தினசரி  நடவடிக்கைகள்
அனைத்திலும்
உன்  நினைவுகளின் வாடை!



உன் கனவுகளின்
எண்ணற்ற நுரைப்பூவில்
ஒவ்வொன்றிலும்
உன் முகங்கள்..!



இந்த கண்ணீர் தேசத்திலிருந்து
இந்த கைதியை
எப்போது விடுவிக்க போகிறாய் ?
உன் காதலுக்காக
என் காதலோடு நான்.


Image result for a hand catching flowers in modern painting



No comments:

Post a Comment