ஒரு
நூலின் ஒரு முனையில் நீ....
மறு முனையில் நான் ......
இருவரும்
இருவேறு திசைகளில் ...
தினசரி
காலை மாலை
நீ வரும் திசை தேடி
என் கண்கள் தவிக்கின்றன !
ஆனால்
திசைகளின் முகத்தில்
நீ -
திரையிட்டிருக்கிறாய் !
அன்றாடம்
நடை பழகிய
வாடிக்கையான பாதைகளில்
உன் கால் தடங்கள்
ஏதாவது மிச்சமிருக்கிறதா?
என -
என் தேடுதல்கள் !
காற்றின் வழியே
உன் உதடுகளின் அசைவுகளில்
என் பெயரின் உச்சரிப்பு
எங்காவது வருகிறதா என
கூர்மையடைகிறது
என் செவிகள்.
தினசரி பொழுதுகளில்
உன் பெயரை
எழுதி எழுதி
என் நெஞ்சம் நிறைவு கொள்கிறது !
தினந்தோறும்
வழி பார்த்து
வழி பார்த்து
விழிகளுக்கும் வயோதிகம்.
பல்லவி பாதியில்.....
நீ
அனுபல்லவி எழுதினால்தான்
பாடல் அரங்கேறும் !
உன்னால் ஆக்கிரமிப்பு செய்யப்பட
என் தினசரி நடவடிக்கைகள்
அனைத்திலும்
உன் நினைவுகளின் வாடை!
உன் கனவுகளின்
எண்ணற்ற நுரைப்பூவில்
ஒவ்வொன்றிலும்
உன் முகங்கள்..!
இந்த கண்ணீர் தேசத்திலிருந்து
இந்த கைதியை
எப்போது விடுவிக்க போகிறாய் ?
உன் காதலுக்காக
என் காதலோடு நான்.

நூலின் ஒரு முனையில் நீ....
மறு முனையில் நான் ......
இருவரும்
இருவேறு திசைகளில் ...
தினசரி
காலை மாலை
நீ வரும் திசை தேடி
என் கண்கள் தவிக்கின்றன !
ஆனால்
திசைகளின் முகத்தில்
நீ -
திரையிட்டிருக்கிறாய் !
அன்றாடம்
நடை பழகிய
வாடிக்கையான பாதைகளில்
உன் கால் தடங்கள்
ஏதாவது மிச்சமிருக்கிறதா?
என -
என் தேடுதல்கள் !
காற்றின் வழியே
உன் உதடுகளின் அசைவுகளில்
என் பெயரின் உச்சரிப்பு
எங்காவது வருகிறதா என
கூர்மையடைகிறது
என் செவிகள்.
தினசரி பொழுதுகளில்
உன் பெயரை
எழுதி எழுதி
என் நெஞ்சம் நிறைவு கொள்கிறது !
தினந்தோறும்
வழி பார்த்து
வழி பார்த்து
விழிகளுக்கும் வயோதிகம்.
பல்லவி பாதியில்.....
நீ
அனுபல்லவி எழுதினால்தான்
பாடல் அரங்கேறும் !
உன்னால் ஆக்கிரமிப்பு செய்யப்பட
என் தினசரி நடவடிக்கைகள்
அனைத்திலும்
உன் நினைவுகளின் வாடை!
உன் கனவுகளின்
எண்ணற்ற நுரைப்பூவில்
ஒவ்வொன்றிலும்
உன் முகங்கள்..!
இந்த கண்ணீர் தேசத்திலிருந்து
இந்த கைதியை
எப்போது விடுவிக்க போகிறாய் ?
உன் காதலுக்காக
என் காதலோடு நான்.
No comments:
Post a Comment