சிலம்பூர் ஆயாவே
உனக்கு
என் சிரம் தாழ்ந்த வணக்கம் !
எனது
ஜீவித்தலின்
ஆதிமூலம் நீ !
உனது
வயிற்றில் பிறக்காத
காரணத்தால்
என்னை
உன் பிள்ளையில்லை
என -
ஏற்றுக்கொள்ள
நீ
மறுத்ததில்லை ..!
பெற்றவளுக்கு
இருந்த
பெரிய பொறுப்பை காட்டிலும்
நீதான் தான்
என் எதிர்காலம் குறித்து
அதிகம்
கவலைப்பட்டாய் !
பாவம்
நீதான்
எனக்காக எவ்வளவு
துன்பப்பட்டாய் !
வாழ்க்கை நிராகரித்த
சமூகத்தின்
கடைகோடியில்
மதிப்பிழந்த நாணயமாய்
கிடந்த என்னை
சமூக சந்தையில்
நான்
நல்ல விலை போக
நீ
தினம் தினம்
செத்து பிழைத்தாய் !
உயிர் கொடுத்தவள்
ஒருத்தி,
அதை
உயிர்ப்பித்தவள் நீ ..!
கால் படி
அரிசி வாங்கி
கஞ்சிவைத்து
என்னை மட்டும் சாப்பிட சொல்லி விட்டு
நீயும் -
உனது மகளும்
சோள தவிட்டை
முருங்கை கீரையில் போட்டு
சுண்டி தின்னது
எனக்கு
இன்னும்
நினைவிருக்கிறது !
பேரன்
எனக்காக
நீ எத்தனை தடவை
உன் மகனிடம்
அவமானப்பட்டாய் !
ஒருநாள்
தலையில்
மண் குடத்தில்
தண்ணீர் சுமந்து கொண்டு வரும்போது,
உன் தள்ளாத
வயதைக்கூட
நினைத்துப்பார்க்காமல்
நீ -
எனக்கு முன்னுரிமை கொடுத்து
வளர்ப்பதை
பொறுக்கமாட்டாத
உன் மகன்
நீ -
தலையில் சுமந்து நின்ற
மண் குடத்தை உடைத்தார் !
குடம் உடைந்து
தண்ணீரில்
முற்றாக நனைந்தாய் !
நான்
கண்ணீரில் நனைந்தேன் !
உனது ஒளியில்
உயிர்வாழும்
உயிர் நான்
நீ
ஒரு பலகீனமான பெண்மணி !
நீ
வைத்திருக்கும்
காசை பிடுங்க
உன்னிடம்
நைசாக பேசினால் போதும்
வைத்திருக்கும்
எல்லா காசையும்
என்னிடம் கொடுப்பாய் !
வெடுக்குன்னு
பிடுங்கி கொண்டு
சினிமா பார்க்க ஓடிவிடுவேன்..!
படிப்பை பற்றி
உனக்கு ஒன்றும் தெரியாது !
ஆறாம் வகுப்பு படிக்கும்
உன் பேரனாகிய நான்
பெரிய
கலெக்டருக்கு
படிப்பதாக
நினைத்து கொண்டிருந்தாய் !
தள்ளாத வயதிலும்
களையெடுக்க போனாய் !
தழைக்கட்டு சுமந்தாய் !
வஞ்சினபுரம் வரை
வரகு அறுக்க போனாய் !
மாம்பழம்
விற்க போனாய் !
நானும்
கூட வந்திருக்கிறேன் !
ஒரு
குடிகாரனுக்கு
வாழ்க்கை ப்பட்டு
நாசமாய் போன
தன் மகளின் வாழ்க்கைக்காக
காலங்காலமாக
ரத்தம் சிந்தி
ஓடாய் உழைத்து
உருகுலைந்து போனாய் !
மகன்கள் குடிகாரர்கள் !
மகன்கள் பெற்றெடுத்த
பேரப்பிள்ளைகள் குடிகாரர்கள் !
மருமகன் குடிகாரன் !
மகள் வாழாவெட்டி !
நரகத்தின் மத்தியில்
வாழ்நாளெல்லாம்
செத்து பிழைத்தாய் !
குடிகாரர்களின் கொடுமை
நீ -
சாகும் வரை தொடர்ந்தது !
கடுமையான
உழைப்போடு பிணைக்கப்பட்ட நீ ...
என்பது ஆண்டுகள்
இடை விடாமல் உழைத்திருக்கிறாய் !
அதில்
நாற்பது ஆண்டுகள்
உனது பிள்ளைகளுக்கும் .
மீதம்
நாற்பது ஆண்டுகள்
எனக்காகவும்
எனது
பிள்ளைக்களுக்காகவும்
உழைத்திருக்கிறாய் !
ஓய்வை பற்றி
நீ பேசியதாக
எனக்கு நினைவில்லை!
சும்மா
உட்கார்ந்து கிடந்தால்
எப்படி பிழைக்க முடியும்
என -
நீ சொல்லுவாய் !
குந்தி தின்றால்
குன்றும் கறையும்
என்பாய் !
தனக்காக
எதுவும் வைத்துகொள்ளாதவள் !
எனக்காக
அனைத்தையும் இழந்தவள்!
இறுதிவரை
இழப்பதற்கு ஒன்றுமில்லை
என -
அவள் எண்ணவில்லை !
ஏனெனில்
உலகில்
எல்லையற்ற
அவளின் அன்புக்கு
ஈடு எதுவுமில்லை !
நிற்கதியாய் நின்ற
என்னையும் ...
என்னை பெற்ற வளையும் ...
ஆதரித்து
அடைக்கலம் கொடுத்த
ஆலமரம் அவள்.
அவள்
எந்த யுகத்தில் பிறந்திருக்கிறாள் ?
எங்கே இருக்கிறாள் ...?
நிகழ் காலத்தின்
வாழ்க்கை நெருக்கடியிலும்
அவளைக்குறித்த
எனது -
பிரக்ஞ்சையிலிருந்து
என்றும்
பிரிக்க இயலாத
இரத்த உறவில்
தினம் தினம்
என் ஆயாவுக்கான
என் தேடல்கள் தொடர்கிறது..!
உனக்கு
என் சிரம் தாழ்ந்த வணக்கம் !
எனது
ஜீவித்தலின்
ஆதிமூலம் நீ !
உனது
வயிற்றில் பிறக்காத
காரணத்தால்
என்னை
உன் பிள்ளையில்லை
என -
ஏற்றுக்கொள்ள
நீ
மறுத்ததில்லை ..!
பெற்றவளுக்கு
இருந்த
பெரிய பொறுப்பை காட்டிலும்
நீதான் தான்
என் எதிர்காலம் குறித்து
அதிகம்
கவலைப்பட்டாய் !
பாவம்
நீதான்
எனக்காக எவ்வளவு
துன்பப்பட்டாய் !
வாழ்க்கை நிராகரித்த
சமூகத்தின்
கடைகோடியில்
மதிப்பிழந்த நாணயமாய்
கிடந்த என்னை
சமூக சந்தையில்
நான்
நல்ல விலை போக
நீ
தினம் தினம்
செத்து பிழைத்தாய் !
உயிர் கொடுத்தவள்
ஒருத்தி,
அதை
உயிர்ப்பித்தவள் நீ ..!
கால் படி
அரிசி வாங்கி
கஞ்சிவைத்து
என்னை மட்டும் சாப்பிட சொல்லி விட்டு
நீயும் -
உனது மகளும்
சோள தவிட்டை
முருங்கை கீரையில் போட்டு
சுண்டி தின்னது
எனக்கு
இன்னும்
நினைவிருக்கிறது !
பேரன்
எனக்காக
நீ எத்தனை தடவை
உன் மகனிடம்
அவமானப்பட்டாய் !
ஒருநாள்
தலையில்
மண் குடத்தில்
தண்ணீர் சுமந்து கொண்டு வரும்போது,
உன் தள்ளாத
வயதைக்கூட
நினைத்துப்பார்க்காமல்
நீ -
எனக்கு முன்னுரிமை கொடுத்து
வளர்ப்பதை
பொறுக்கமாட்டாத
உன் மகன்
நீ -
தலையில் சுமந்து நின்ற
மண் குடத்தை உடைத்தார் !
குடம் உடைந்து
தண்ணீரில்
முற்றாக நனைந்தாய் !
நான்
கண்ணீரில் நனைந்தேன் !
உனது ஒளியில்
உயிர்வாழும்
உயிர் நான்
நீ
ஒரு பலகீனமான பெண்மணி !
நீ
வைத்திருக்கும்
காசை பிடுங்க
உன்னிடம்
நைசாக பேசினால் போதும்
வைத்திருக்கும்
எல்லா காசையும்
என்னிடம் கொடுப்பாய் !
வெடுக்குன்னு
பிடுங்கி கொண்டு
சினிமா பார்க்க ஓடிவிடுவேன்..!
படிப்பை பற்றி
உனக்கு ஒன்றும் தெரியாது !
ஆறாம் வகுப்பு படிக்கும்
உன் பேரனாகிய நான்
பெரிய
கலெக்டருக்கு
படிப்பதாக
நினைத்து கொண்டிருந்தாய் !
தள்ளாத வயதிலும்
களையெடுக்க போனாய் !
தழைக்கட்டு சுமந்தாய் !
வஞ்சினபுரம் வரை
வரகு அறுக்க போனாய் !
மாம்பழம்
விற்க போனாய் !
நானும்
கூட வந்திருக்கிறேன் !
ஒரு
குடிகாரனுக்கு
வாழ்க்கை ப்பட்டு
நாசமாய் போன
தன் மகளின் வாழ்க்கைக்காக
காலங்காலமாக
ரத்தம் சிந்தி
ஓடாய் உழைத்து
உருகுலைந்து போனாய் !
மகன்கள் குடிகாரர்கள் !
மகன்கள் பெற்றெடுத்த
பேரப்பிள்ளைகள் குடிகாரர்கள் !
மருமகன் குடிகாரன் !
மகள் வாழாவெட்டி !
நரகத்தின் மத்தியில்
வாழ்நாளெல்லாம்
செத்து பிழைத்தாய் !
குடிகாரர்களின் கொடுமை
நீ -
சாகும் வரை தொடர்ந்தது !
கடுமையான
உழைப்போடு பிணைக்கப்பட்ட நீ ...
என்பது ஆண்டுகள்
இடை விடாமல் உழைத்திருக்கிறாய் !
அதில்
நாற்பது ஆண்டுகள்
உனது பிள்ளைகளுக்கும் .
மீதம்
நாற்பது ஆண்டுகள்
எனக்காகவும்
எனது
பிள்ளைக்களுக்காகவும்
உழைத்திருக்கிறாய் !
ஓய்வை பற்றி
நீ பேசியதாக
எனக்கு நினைவில்லை!
சும்மா
உட்கார்ந்து கிடந்தால்
எப்படி பிழைக்க முடியும்
என -
நீ சொல்லுவாய் !
குந்தி தின்றால்
குன்றும் கறையும்
என்பாய் !
தனக்காக
எதுவும் வைத்துகொள்ளாதவள் !
எனக்காக
அனைத்தையும் இழந்தவள்!
இறுதிவரை
இழப்பதற்கு ஒன்றுமில்லை
என -
அவள் எண்ணவில்லை !
ஏனெனில்
உலகில்
எல்லையற்ற
அவளின் அன்புக்கு
ஈடு எதுவுமில்லை !
நிற்கதியாய் நின்ற
என்னையும் ...
என்னை பெற்ற வளையும் ...
ஆதரித்து
அடைக்கலம் கொடுத்த
ஆலமரம் அவள்.
அவள்
எந்த யுகத்தில் பிறந்திருக்கிறாள் ?
எங்கே இருக்கிறாள் ...?
நிகழ் காலத்தின்
வாழ்க்கை நெருக்கடியிலும்
அவளைக்குறித்த
எனது -
பிரக்ஞ்சையிலிருந்து
என்றும்
பிரிக்க இயலாத
இரத்த உறவில்
தினம் தினம்
என் ஆயாவுக்கான
என் தேடல்கள் தொடர்கிறது..!
No comments:
Post a Comment