Monday, 24 December 2018

ஆறுமுகம் நாட்டார் அண்ணாச்சி


தன்
கல்யாணத்தின்
இரண்டாம் வழி  முடிந்து
தாய்  வீ ட்டிலிருந்து கிளம்பும் போது
இன்னைக்கு
முதன் முதலா  தண்டவாளத்தில் ரயில் வருதாம் ...
என -
தன  பிறந்தகமான
சிலம்பூரிலிருந்து
வேக்கு வேக்குன்னு ,
கால் நடையாய் நடந்து  வந்ததாக
அம்மாயி சின்னபிள்ளை
அடிக்கடி   சொல்வாள் .. !


முதல்  ரயில்
மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு
இரண்டு தண்டவாளத்துக்கு இடையில்
ரயில் வந்ததையும்,
ஊர்  ஜனங்கள்
ரயில் ரோட்டு ஓரத்தில் நின்று கொண்டு
வேடிக்கை பார்த்ததையும் ,
அம்மாயி நினைவு கூர்கிறபோது
கண்களில் நீர் பளிச்சிட்டன ..!

அவ்வபோது
கொடுக்கூர்  ஆறுமுகம்  நாட்டாரின்
வீர சாகசங்களை கூறும்போது  ...
தான் -
சின்ன வயது சிறுமியாய்
இருக்கும் போது
சிலம்பூர்  பெட்டு  (காடு )
காட்டில்
ஆடுமாடு மேய்த்து கொண்டிருக்கும்  போது...
ஆறுமுகம் நாட்டார் துப்பாக்கியை
தோளில்  மாட்டிகொண்டு அவ்வழியாய்
அடிக்கடி  வருவார்..!
என்ன தங்கசிகளா,
நல்லாயிருக்கீங்களா அம்மா?"
என -
சகோதரத்துவத்துடன் விசாரிப்பார்.
நாங்கள் -
வாளிவட்டாயில் கொண்டுவந்த சோற்றை
வற்புறுத்தி  சாப்பிட சொன்னால்தான்  சாப்பிடுவார்!


அடிக்கடி
இடையிடையே
நீங்க சாப்பிடீங்களா?" என கேட்பார் !
என -
அம்மாயி
நீ
சொல்ல
நான் கேட்டிருக்கிறேன்.
மிக ராகமா   பாடுவ ...
"காடு மல    சுத்தும் வண்டி.
காப்பி     தண்ணி
குடிக்கும்     வண்டி
பொக்குழி    காட்டுக்குள்ளே
உப்புமாவு    தின்னும் வண்டி.
நொடிக்கு  ரெண்டு மயிலாம்
அது
கலக்க போகுது  ஜெயிலாம் 
என -
நீ  பாடுவாய் !



அடக்கடி...
வப்பாட்டியால  குடும்பம்   கெட்டு  போகக்கூடாது
என
நீ  கூறுவாய்!
கொடுக்கூர்
ஆறுமுகம்நாட்டார்அண்ணாச்சி
வப்பாட்டியாலதான்
செத்தார் !
என்று
அம்மாயி நீ   சொன்னாய்  !


கொடுக்கூருல
புள்ளமாருங்க
ஆதிக்கத்துக்கு  எதிராகத்தான்
ஆறுமுகம்
சண்டை போட்டார் !
என-
நீ  சொன்னபின்புதான்
அவர்
ஓர் வர்க்க போராளி  என்பதை
தெரிந்து  கொண்டேன் !
     

No comments:

Post a Comment