மரங்கள்
மழையோடு ஆழ்ந்து பேசுகின்றன !
ஈரக்காற்றின் வெளியெங்கும் விரியும்
இலைகளின் காதலின் மொழி
நாட்களின் வழியே
நெடிதே பயணிக்கின்றன !
குளிரில் சிலிர்க்கும்
உயிரின் தொலைவில்
தவளைகளின்
தாள லயங்களில்
சில்லிட்டுக்கிடக்கிறது பகற்பொழுது !
மழையோடு ஆழ்ந்து பேசுகின்றன !
ஈரக்காற்றின் வெளியெங்கும் விரியும்
இலைகளின் காதலின் மொழி
நாட்களின் வழியே
நெடிதே பயணிக்கின்றன !
குளிரில் சிலிர்க்கும்
உயிரின் தொலைவில்
தவளைகளின்
தாள லயங்களில்
சில்லிட்டுக்கிடக்கிறது பகற்பொழுது !
பகலவனின் தொடுகை
தொலைந்த நண்பகலின்
பின்னிரவில்
மனித சஞ்சாரமற்ற
பாட்டைகளின் வெளியெங்கும்
கால நடைகளின் தடங்கள்
மவுனித்துக்கிடக்கின்றன !
விரைத்துக்கிடக்கும் குளிரில்
நடுங்கி தொலைக்கிறது
நாளின் உடலம் !
போர்வை வேண்டி
கைகளை நீட்டுகிறது
தாகம் !’
தொலைந்த நண்பகலின்
பின்னிரவில்
மனித சஞ்சாரமற்ற
பாட்டைகளின் வெளியெங்கும்
கால நடைகளின் தடங்கள்
மவுனித்துக்கிடக்கின்றன !
விரைத்துக்கிடக்கும் குளிரில்
நடுங்கி தொலைக்கிறது
நாளின் உடலம் !
போர்வை வேண்டி
கைகளை நீட்டுகிறது
தாகம் !’
No comments:
Post a Comment