யார் யாரோ வருகின்றார்கள்
யார் யாரோ போகின்றார்கள்
எவ்வளவு ஆழமாக
நினைத்துப்பார்த்தாலும்
அவர்களின் அவர்களாக
தெரியவில்லை!
பயணம் நீள்கிறது
பாதை குறைகிறது
நிலவின் முகப்பில்
இருள் கவ்வியிருக்கிறது !
நீளும் கரங்களில்
குருதி வழிகிறது !
மெள்ள
புன்னகைக்க சொன்னாய் !
இதழ்களில்
அமிலம் வழிகிறது !
எத்தனைதடவை
அழைத்தாலும்
மழை பொழிய மறுக்கிறது
வெறுப்புறும் வானம் !
எத்தனைதடவை
அழைத்தாலும்
ஒரே விதமாகத்தான்
ஒன்றன்பின்
ஒன்றாய் நகர்கிறது
சலிப்புறும் அழைப்புகள் !
அருகருகே
இருந்தபோதிலும்
அடைக்கல கொடுக்க மறுக்கின்றன
இருவரின்
நிழல்களும் !

யார் யாரோ போகின்றார்கள்
எவ்வளவு ஆழமாக
நினைத்துப்பார்த்தாலும்
அவர்களின் அவர்களாக
தெரியவில்லை!
பயணம் நீள்கிறது
பாதை குறைகிறது
நிலவின் முகப்பில்
இருள் கவ்வியிருக்கிறது !
நீளும் கரங்களில்
குருதி வழிகிறது !
மெள்ள
புன்னகைக்க சொன்னாய் !
இதழ்களில்
அமிலம் வழிகிறது !
எத்தனைதடவை
அழைத்தாலும்
மழை பொழிய மறுக்கிறது
வெறுப்புறும் வானம் !
எத்தனைதடவை
அழைத்தாலும்
ஒரே விதமாகத்தான்
ஒன்றன்பின்
ஒன்றாய் நகர்கிறது
சலிப்புறும் அழைப்புகள் !
அருகருகே
இருந்தபோதிலும்
அடைக்கல கொடுக்க மறுக்கின்றன
இருவரின்
நிழல்களும் !
அருமை
ReplyDelete